Quantcast
Channel: கவிதை குவியல்
Viewing all 82 articles
Browse latest View live

அழுகை

$
0
0
என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ
எனக்கு தெரியாது?

ஆனால் …
உனக்கு அழுகை வந்தாலே
என் உயிர் போய்விடும்!!

கண்ணீர்

$
0
0
நீ என்னை பிரிந்தாலும்
நீ என்னை மறந்தாலும்

என்றாவது நீ என்னை நினைக்கும் போது
கண்களில் இருப்பேன் கண்ணீராக!!

அவளின் ஞாபகங்களே சுவாசம்

$
0
0

பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

நீயும் என்னைக்
காதலித்தாயா?

காதல்

$
0
0
நீ மூடி மறைக்க
நினைத்த காதல்
முட்டிக்கொண்டு நிற்கின்றது
உன் மௌனத்தில்.
ஒருமுறை உன் இதழ்
அசைத்தால் போதும்,
உயிர் பெற்றுவிடும்
என் காதலும்
என் கவிதையும்.

கணிதம்

$
0
0
இரண்டில் ஒன்று போனால்
ஒன்று
என்பது கணிதம்.

இரண்டில் ஒன்று போனால்
ஒன்றுமில்லை
என்பது காதல்.

நிஜம்

$
0
0
நீ
பேசுவதெல்லாம்
நிஜம் என்று நினைக்கும்
என்னிடத்தில்
நீ ஏன்
பேசாமல் இருக்கிறாய்!!

இதயம்

$
0
0
எந்த ஒரு இதயம் உன்னை பார்க்க கூடாது என்று சொல்லி மறக்க துடிக்கின்றதோ?
அந்த இதயம் தான் உன்னை அதிகமாக நேசிக்கும்..

பிரிவு

$
0
0
கண்களின் அனுமதி கேட்டா நான் உன்னை பார்த்தேன்?
இதயத்தின்அனுமதி கேட்டா நீ என்னுல் வந்தாய்?
நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நம்முள் வந்தது?
இப்போது யார் அனுமதி கேட்டு என்னை நீ பிரிந்தாய்?

ஆசை

$
0
0
எனக்கு
என்னை
பிடித்திருப்பதே!

உனக்கும்
என்னை
பிடித்திருப்பதால்தான்!! 

காதல்

$
0
0
உனக்கு
காதலிக்கத் தெரியவில்லையென
வருத்தப்படாதே

காதலிக்கிறேன்
என்று மட்டும் சொல்

உனக்கும்
சேர்த்து நான்
காதலிக்கிறேன்

உயிர்

$
0
0
அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்துகொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டுமல்ல உயிரையும் கொடுப்பேன்!!

உண்மை

$
0
0
ஆண்
உண்மையாக இருந்தால்
பெண் ஏமாற்றி விடுகிறாள்!

பெண்
உண்மையாக இருந்தால்
ஆண் ஏமாற்றி விடுகிறான்!!

இருவரும்
உண்மையாக இருந்தால்
இறைவன் ஏமாற்றி விடுகிறான்!!!

நம்பிக்கை

$
0
0
எல்லோரும் என்னை
விட்டுப் போனார்கள்!

எல்லாமும் என்னை
விட்டுப் போயின!!

எஞ்சியிருப்பது
நானும் எனது
நம்பிக்கையும்தான்!!!

ஆசை

$
0
0
எனக்கு
என்னை
பிடித்திருப்பதே!

உனக்கும்
என்னை
பிடித்திருப்பதால்தான்!! 

பிரிவு

$
0
0
கண்களின்
அனுமதி கேட்டா
நான் உன்னை பார்த்தேன்?

இதயத்தின்
அனுமதி கேட்டா
நீ என்னுல் வந்தாய்?

நம் இருவரின்
அனுமதி கேட்டா
காதல் நம்முள் வந்தது?

இப்போது
யார் அனுமதி கேட்டு
என்னை நீ பிரிந்தாய்?

பாடம்

$
0
0
வாழ்க்கையில் எதுவும்
சொல்லிட்டு வருவதில்லை!

வந்தது எதுவும்
சொல்லிக் கொடுக்காமல் போவதில்லை!!

மாற்றம்

$
0
0
மாற்றங்களுக்கு காரணம்

சிலர் தரும் ஏமாற்றங்கள்தான்!!

நிம்மதி

$
0
0
உலகில்
நிம்மதியாக
வாழ ஒரே வழி!

யாரையும்
நேசிக்காமல்
இருப்பது தான்!!

அன்பு

$
0
0
எல்லா ஆண்களுக்கும்
கிடைப்பதில்லை!

தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு
ஒரு பெண்ணின் உண்மையான அன்பு!!

அருமை

$
0
0
அன்பு
கிடைத்தவர்களுக்கு
தெரியாது!

கிடைக்காதவர்களுக்கு
புரியாது!

தொலைத்தவர்களுக்குத்தான்
தெரியும்
அதன் அருமை!
Viewing all 82 articles
Browse latest View live